கலை பண்பாட்டுத் துறையின் வாயிலாக ஓவிய மற்றும் சிற்பக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் வகையில் ஆக.3 அன்று சென்னை அரசு அருங்காட்சியகம் வளாகத்தில் ஓவியம் மற்றும் சிற்பக்கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ஓவியச் சந்தை துவங்கியது. ஆக 6ஆம் தேதி வரை நடைபெறும் இந்த சந்தையை அமைச்சர். மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார். இவ்விழாவில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் பி. சந்தரமோகன், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சே.ரா.காந்தி, அரசு அருங்காட்சியகங்களின் இயக்குநர் கவிதாராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.