“நம்முடைய பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தில் பதற்றத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறார். தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி, இஸ்லாமியர்களை என்ன பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது முஸ்லிம் மன்னர்களை எல்லாம் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். பல மாநிலங்களில் பலவிதமான பிரச்சாரங்களை பாஜகவினர் செய்து வருகின்றனர். பாஜகவின் எந்த ஒரு திட்டமும் கை கொடுக்காது” என்று இராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி குறிப்பிட்டுள்ளார்.