tamilnadu

img

தனியார் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு

தனியார் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு

எப்எல்2 என்கிற தனியார் மது பான கடை அமைக்க எதிர்ப்பு தெரி வித்து சேலத்தில், வாலிபர் சங்கத்தி னர் கழுத்தில் காலி மது பாட்டலைக் கட்டிக்கொண்டு நூதனமாக வந்து  மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகை யில், சேலம் மாநகரம் உடையாப் பட்டி பகுதியில், ஏற்கனவே அரசு மதுபானக் கடை செயல்பட்டு வரு கிறது. இந்நிலையில், அதே பகுதி யில் தனியார் மதுபானக் கடையை  அமைக்க அரசு அனுமதி அளித்துள் ளது. இந்த பகுதியில் பள்ளி, கல் லூரிகள், கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. அரசின் டாஸ் மாக் மதுக்கடைக்கே கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில ஈடு பட்டிருந்தோம். இப்போது அதே  இடத்தில், தனியார் மதுக்கடைக் கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கோவை மாநகரத்தில் ஏற்கனவே  70 தனியார் மதுபானக் கடைக ளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது சேலத்திலும் இதே போன்று நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவது, இளைஞர் களை மது போதைக்கு அடிமை யாக்கும் செயல் இது. இதுபோன்ற  கொள்கைகளை அரசு உடனடியாக  நிறுத்த வேண்டும். இல்லையெ னில் மாவட்டம் முழுவதும் போராட் டங்களை நடத்துவோம் என்றனர். இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பெரியசாமி தலைமையில் நடை பெற்ற இந்த போராட்டத்தில், வாலி பர் சங்க நிர்வாகிகள் விமல், வீர மணி மோகன், பிரபாகரன் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.