tamilnadu

img

சென்னை - மைசூர் இடையே மேலும் ஒரு வந்தேபாரத் ரயில்

சென்னை, மார்ச் 9-  சென்னை-பெங்களூர்- மைசூர் தடத்தில் ஏற்கெனவே ஒரு வந்தே பாரத் ரயில் இயங்கி வரும் நிலையில், இப்போது இதே தடத்தில் மற்றொரு வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் விரிவான பொது போக்குவரத்து என்றால் அது இந்தியன் ரயில்வே தான்.

நாட்டின் எந்த பகுதிக்கும் உங்க ளால் ரயில் மூலம் எளி தாகப் பயணிக்க முடியும். செலவும் குறைவு. வேக மாகவும் செல்ல முடியும் என்பதால் பொதுமக்கள் பலரும் ரயில்களில் பய ணிக்கவே விருப்பம் காட்டு கிறார்கள்.  தமிழகத்தைப் பொறுத்த வரைச் சென்னை-பெங்க ளூர்- மைசூர் தடத்தில் தான் இந்த வந்தே பாரத் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது முதலே இதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. சென்னை பெங்களூர் என இரு முக்கிய நகரங்களை இணைப்பதால் இதன் டிக்கெட்கள் படுவேகமாக விற்று தீர்ந்துவிடுகிறது.

இதனால் பல பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. இதற்கிடையே இந்த பாதையில்  கூட்டம் அலை மோதும் நிலை யில், சென்னை-பெங்க ளூர்- மைசூர் மார்க்கத் தில் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலைத் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தவுள்ளது.   ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில் இந்த ரூட்டில் இயக்கப்படும் எனத் தெரிகிறது. இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் காலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் மைசூர் அடையும்.

ஆனால், இப்போது அறி முகப்படுத்தப்படும் வந்தே பாரத் காலையில் மைசூரில் இருந்து புறப்பட்டு, மதியம் சென்னை வந்தடையும். இந்த வந்தே பாரத் ரயி லின் டிக்கெட், இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் டிக்கெட் விலைக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மைசூரில் புறப்படும் இந்த ரயில் மாண்டியா - எஸ்எம்விடி பெங்களூரு - கிருஷ்ணராஜபுரம் - ஜோலார்பேட்டை - காட்பாடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கடைசி யில் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்திற்கு வரும்.

மைசூரில் காலை 6 மணிக்குக் புறப் படும் வந்தே பாரத் ரயில் காலை 7.40 மணிக்குப் பெங்களூர் வந்து சேரும்.  பின்னர் மதியம் 12.20க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறு மார்க்கமாக 5 மணிக்குக் சென்னையில் இருந்துபுறப்படும் வந்தே பாரத்ரயில் , இரவு 9.30 மணிக்குப் பெங்களூரும் இரவு 11.20க்கு மைசூரும் சென்றடையும்என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.