கட்டுமான பொருட்களின் விலை உயர்வை மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும் வடசென்னை கட்டுமான சங்க மாநாடு வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 27- கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை பெருநகர கட்டுமான தொழி லாளர்கள் சங்கத்தின் வடசென்னை மாவட்ட 27ஆவது மாநாடு பெரம்பூர் எம்.கே.பி. நகரில் ஞாயிறன்று (ஜூலை 27) நடைபெற்றது. தலைவர் ஏ.நடராஜன் தலைமை தாங்கி னார். சங்க கொடியை அம்பத்தூர் பகுதி செயலாளர் கே.சீனிவாசன் ஏற்றினார். திரு வொற்றியூர் பகுதிச் செயலாளர் ஜெ.அன்பு அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயராமன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் பி.லூர்துசாமி வேலை அறிக்கையையும், பொருளாளர் எம்.மூர்த்தி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் மணிமேகலை, வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் மா.பூபாலன் வாழ்த்திப் பேசினார். மாநிலத் தலைவர் பி.கே.பெருமாள் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக பெரம்பூர் பகுதிச் செயலாளர் ஏ.தமிம் வரவேற்றார். மணலி பகுதிச் செயலாளர் ஜி.சிட்டிபாபு நன்றி கூறினார். தீர்மானங்கள் தேச விரோத, மக்கள் விரோத தொழி லாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், நகர்ப்புற மக்களின் வாழ்விடங்களை அகற்றக் கூடாது, கட்டு மான பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பெண் தொழி லாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், நலவாரிய ஆன்லைன் பதிவை எளிமையாக்க வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கட்டு மான தொழிலாளி மனைவியின் மகப்பேறு நிதி 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், இயற்கையாக மரணம் அடைந்தால் 2 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் செயல் தலைவராக பி.லூர்துசாமி, தலைவராக ஏ.நடராஜன், செயலாளராக ஜி.சிட்டிபாபு, பொருளாளராக வி.சரவணன் உள்ளிட்டு 19 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.