ராயப்பேட்டையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
சென்னை,ஆக.17- சென்னை ராயப்பேட்டை பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட “ஹிஸ்புத் தஹீரிர்” அமைப்புக்கு யூ டியூபில் ஆள் சேர்க்கப்பட்டதாக கூறி சென்னையை சேர்ந்த 6 பேரை பயங்கரவாத தடை சட்டத்தில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். 6 பேர் கைது செய்யப்பட்ட வழக்கு என்ஐஏ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் “ஹிஸ்புத் தஹீரிர்” அமைப்புக்கு யூடியூபில் மூலம் ஆள் சேர்க்கப்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தங்கம் விலை ரூ.840 உயர்வு
சென்னை, ஆக.17- சென்னையில் சனிக்கிழமை யன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,670-க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.53,360 க்கும் விற்பனை செய்யப்படு கிறது. கடந்த 10 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு சுமார் ரூ.2000-க்கும் அதிக மாக உயர்ந்து தற்போது ரூ.53 ஆயிரத்தை கடந்துள் ளது. வெள்ளி விலை கிரா முக்கு ரூ.2 அதிகரித்து ஒரு கிராம் ரூ.91-க்கு விற்பனை யாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.91 ஆயிரத் துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.