சென்னை, ஜூன் 28 - ‘நீட்’ விலக்கு சட்ட முன்வடிவுக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த அர சினர் தனித் தீர்மானம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) அன்று, கேள்வி நேரம் முடிந்ததும் முத லமைச்சர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்வி லிருந்து விலக்கு கோரும், அரசினர் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
“கிராமப்புற, ஏழை - எளிய மாண வர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பு களை கடுமையாக பாதிக்கும் வகையிலும், பள்ளிக் கல்வியை அவசியமற்றதாக்கும் வகையிலும், மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் உரிமை யை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் வகையிலும் அமைந்துள்ள ‘நீட்’ தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். இந்தத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து, பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெறும் 12-ஆவது வகுப்பு மதிப் பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, இந்தச் சட்ட மன்றப் பேரவை ஒருமனதாக நிறை வேற்றி அனுப்பிய ‘நீட்’ விலக்கு சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும். தொடர்ந்து பல முறை கேடுகளுக்கு வழிவகுத்து வரும் நீட் தேர்வு முறையை பல்வேறு மாநி லங்களும் தற்போது எதிர்த்து வரும் நிலையில், தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகை யில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங் களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை ஒருமனதாக வலி யுறுத்துகிறது”- என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த, இந்த தனித் தீர்மா னத்தை ஆதரித்தும் வரவேற்றும் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் உரையாற்றினர். அதைத் தொடர்ந்து நீட்டிற்கு விலக்கு கோரும் அரசினர் தனித் தீர்மானம் ஒரு மனதாக நிறை வேற்றப்பட்டது.
பாஜக எதிர்ப்பு - வெளிநடப்பு
முன்னதாக, நீட்டிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு கோரும் முதலமைச்சரின் தனித் தீர்மானத்தை பாஜக எதிர்ப்பதாக, அதன் சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித் தார். தொடர்ந்து அந்த கட்சி உறுப் பினர்கள், தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து வெளியேறினர்.