கும்மிடிப்பூண்டி, செப். 24- பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு சொந்த மான ரூ.20 கோடி மதிப்புள்ள நரிக்குளம் ஏரியை மீட்டு ஊராட்சியில் ஒப்படைக்க வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள பெத்திக்குப்பத்தில் ஞாயிறன்று சிபிஎம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் வட்டக் குழு உறுப்பின ரும், வார்டு உறுப்பினருமான ப.லோகநாதன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாரா யணன், வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.கீதா, வட்டக் குழு உறுப்பினர்கள் வி.ஜோசப், காமாட்சி, வசந்த பௌத்த, டிக்சன், முனிரத்தினம், கிளைச் செயலாளர் அரசு, ஆகியோர் பேசி னர். முன்னதாக ஜானகிராமன் வரவேற்றார். பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குளத்தை பழைய ஏசிஎல் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதை மீடடு ஊராட்சியில் ஒப்படைக்க வேண்டும், பஜனை கோயில் தெருவில் உள்ள வீடுகளுக்கு நெற்களம் என்பதை மாற்றி பயனாளிகளின் பெயரில் கணினி பட்டாக்களை வழங்க வேண்டும், நீண்ட காலமாக வாடகை வீட்டில் வசித்து வரும் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க வேண்டும், அப்பகுதி மக்களின் குடிநீராக விளங்கும் தாமரை ஏரியில் ரசாயன கழிவுநீர் விடுவதை தடுத்து ஏரியை தூய்மை படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுக் கூட்டத்தில் வலியுறுத்தினர். மகளிர் உரிமை தொகை, முதியோர் ஓய்வூதியம் வேண்டிய சிபிஎம் தலைவர் களிடம் பெண்கள் மனு அளித்துள்ளனர்.