இரா.முத்தரசன் இன்று முதல் பிரச்சாரப் பயணம்
சென்னை, மார்ச் 27- மக்களவை பொதுத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டி யிடும் வேட்பாளர் களை ஆதரித்து இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் பிரச்சாரப் பயணம் மேற் கொள்கிறார்.
பெரம்பலூரில் மார்ச் 28 அன்று பிரச் சாரத்தை துவங்கும் இரா. முத்தரசன், ஏப்ரல் 17 அன்று நாகப்பட்டினத்தில் நிறைவு செய்கிறார். பயணத்திட்ட விவரம்:
ஏப். 28 வியாழன் காலை பெரம்ப லூர் நகரம், மாலை துறையூர் மற்றும் மண்ணச்சநல்லூர். ஏப். 29 காலை அரியலூர், மாலை ஜெயங்கொண்டம் பொதுக்கூட்டம். ஏப்.1 காலை வேலூர், குடியாத்தம், மாலை திருப்பத்தூர், ஏப். 2 கிருஷ்ணகிரி, ஏப். 3 தருமபுரி, ஏப். 4 சேலம், ஏப். 5 திருவாரூர், மன்னார்குடி, ஏப். 6. காலை திருச்சி மாநகர், திரு வெரும்பூர், மாலை மணப்பாறை. ஏப். 7 விழுப்புரம், ஏப். 8 காலை கடலூர், மாலை சிதம்பரம், சீர்காழி. ஏப். 9 புதுச்சேரி, ஏப். 10 தஞ்சாவூர், ஏப்.11 மாலை நாகப்பட்டி னம். ஏப். 12 திருப்பூர்.
திண்டுக்கல்-மதுரை
ஏப். 13 சனிக்கிழமை காலை திண்டுக் கல், மாலை மதுரை. ஏப். 14 ஞாயிறு காலை சத்தியமங்கலம் (நீலகிரி தொகுதி) மாலை கோவை, ஏப். 15 காலை இராம நாதபுரம், மாலை விருதுநகர், தென்காசி, ஏப்.16 தூத்துக்குடி, ஏப்.17 நாகப்பட்டினம்.
‘இந்தியா’ கூட்டணிக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு
சென்னை, மார்ச் 27- வரும் மக்கள வைத் தேர்தலில் திமுக தலைமையி லான இந்தியா கூட் டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவித் துள்ளது.
சென்னை மண்ணடியில் உள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமை யகத்தில் தேசியத் தலைவர் எஸ்.எம். பாக்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்த பாக்கர, தமிழக மக்கள் 40 தொகுதிகளி லும் இந்தியா கூட்டணி வேட்பாளர் களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும்” என்றார்.