சென்னை:
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, பொருளாதார ரீதியில் நலிந்தோருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மோடி அரசு அவசர, அவசரமாக அமல்படுத்த துடிப்பது ஏன்
எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை பாஜக அரசு கொண்டுவந்தபோது, இது ஏற்கனவே இட ஒதுக்கீடு பெற்றுவரும் மற்ற பிரிவினரை பாதிக்காது என்று கூறப்பட்டது.ஆனால், அண்மையில் ‘ஐபிபிஎஸ்’ எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், பிற பிற்படுத்தப்பட் டோர், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இட ஒதுக் கீட்டிலிருந்து எடுத்து, பொருளாதாரத் தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.நடைமுறையில் எஸ்.சி. பிரிவினருக்கு 15 விழுக் காடு இட ஒதுக்கீடு உள்ளது. தற்போது 13 விழுக்காடு ஆக குறைக்கப்பட்டுள்ளது.எஸ்.டி. பிரிவினருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக் கீட்டுக்குப் பதிலாக, 6 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பிற்படுத்தப் பட்டோருக்கு 27 காட்டிலிருந்து, 21 விழுக்காடாக குறைக்கப் பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கான 50 விழுக் காட்டிலிருந்து 40.5 விழுக்காடாக குறைக்கப் பட்டுள்ளது.பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு மட்டும் 10 அப்படியே தொடர்கிறது. இது அரசியல் சாசனத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்.
தற்போது வங்கிகளில் காலியாகவுள்ள 1,417 இடங்களில், பிற பின்தங்கிய வகுப்பினருக்கு 300 இடங்களும், எஸ்.சி., பிரிவினருக்கு 196 இடங்களும், எஸ்.டி., பிரிவினருக்கு 89 இடங்களும் மட்டுமே கிடைக்கும். பொதுப்பட்டியலில் வருவோருக்கு 690 இடங்கள் கிடைக்கும். அதேசமயம், 10 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 142 இடங்கள் கிடைக்கும் என்பதுதான் விநோதம். பிற பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரிடமிருந்து 142 பணியிடங்களை எடுத்து, முற்பட்ட வகுப்பினருக்கு மத்திய பாஜக அரசு வழங்குகிறது.இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத் தில் நிலுவையில் இருக்கும்போது, பொருளாதார ரீதியில் நலிந்தோருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மோடி அரசு அவசர, அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.