tamilnadu

img

வேலூர் யங் இந்தியன்ஸ் சார்பில் மாதிரி நாடாளுமன்றம்

வேலூர் யங் இந்தியன்ஸ் சார்பில் மாதிரி நாடாளுமன்றம்

வேலூர், ஜூன் 28 - யங் இந்தியன்ஸ் வேலூர் அமைப்பு சார்பில் மாதிரி நாடாளுமன்ற நிகழ்வை விஐடி உதவி துணை தலைவர் காதம்பரி ச.விசு வநாதன் தொடங்கி வைத்தார். இந்த மாதிரி நாடாளுமன்ற கருத்தரங்கம் மற்றும் விவாத நிகழ்ச்சி ஜூன் 28, 29 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவிற்கு யங் இந்தியன்ஸ் வேலூர் அமைப்பின் தலைவர் ஆர். பிரசாந்த் தலைமை வகிக்க, துணைத் தலைவர் அல்தாப் உசேன், செயலாளர்கள் ராகுல், விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக விஐடி உதவி துணை தலைவர் காதம்பரி ச.விசுவநாதன் கலந்துகொண்டு தொடங்கி வைத்து பேசுகையில், “டிஜிட்டல் உலகத்தில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. இந்த இளம்பருவத்தில்  சமூக வலைதளத்தில் மூழ்கி விடக்கூடாது. உங்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு தேவை”என்றார். இந்த மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சியில் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள 120 மாணவர்களும், 30 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். 2 நாள் கருத்தரங்கம் இன்று (ஜூன் 29) மாலை நிறைவு பெறுகிறது.