tamilnadu

img

தண்ணீர் பற்றாக்குறையால் விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் மிரட்டல்

தண்ணீர் பற்றாக்குறையால் விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மிரட்டல் விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவிவருகிறது. பருவமழை பொய்த்துப்போனதாலும், நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்ததாலும் பொதுமக்கள்  மக்கள் குடிநீருக்காக இரவு பகலாக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் தண்ணீர் பற்றாக்குறையால் பல பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யும் பொறுப்பை  தட்டிக்கழிக்கும் வகையில் அரசு மழை வேட்டி தமிழகம் முழுவதும் யாகம் நடத்த உத்தரவிட்டுள்ளது. இது மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தை மீறும் நடவடிக்கை என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளன. பள்ளிகளில் குழந்தைகளுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதை தமிழக அரசு இதுவரை உறுதி செய்யவில்லை. 

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறையை காரணம் காட்டி விடுமுறை அளிப்பது விதிகளுக்கு முரணானது.  பள்ளிகள் மூடப்படுகிறதா என்பதை கண்காணிக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என கூறினால் அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி இல்லாத தனியார் பள்ளிகளின் தடையின்மை சான்று ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.