சென்னை,நவ.27- தமிழ்நாட்டில் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் அவர்களது பெயர், வயது, சாதி உள்ளிட்ட புள்ளி விவரங்களை சேகரி ப்பதாக செய்திகள் வெளியாகி இருந் தன. இதற்கு அதிமுக பொதுச் செய லாளர் பழனிசாமி கண்டனம் தெரி வித்திருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
சமூக நலத் திட்டங்களை செயல் படுத்தும் போது, அந்த திட்டம் மக்க ளுக்கு எந்த அளவுக்கு பலன் அளிக் கிறது என்று ஆராய்ந்து, அதை இன்னும் செம்மைப்படுத்த முனைவது அரசின் கடமை. அந்த வகையில்தான் மாநில திட்டக்குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தது.
அந்த ஆய்வின் முடிவில், கட்டண மில்லா பயணம் மூலம் சராசரியாக ஒவ்வொரு மகளிருக்கும் ரூ.88 பேருந்து கட்டணம் செலவிட்டது மிச்சமாகிறது என்பது தெரியவந்தது.
அதன் அடுத்த கட்ட ஆய்வு தான் இப்போது நடந்து கொண்டிருக் கிறது. சமுதாயத்தின் அந்த அடுக்கை சேர்ந்தவர்களுக்கு, எந்த வயதின ருக்கு, இத்தகைய வருவாய் உள்ளோ ருக்கு இந்த திட்டம் பயன்படுகிறது என்று ஆய்வு அறிக்கையின் அடிப்படை யில் அறிந்து, அதை இன்னும் கூர்மைப் படுத்துவது தான் இதன் நோக்கம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.