tamilnadu

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை தகவல்....

சென்னை:
வேளாண்துறை அமைச் சர் துரைக்கண்ணு உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணுக்கு கடந்த 13 ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவமனையில் முதற் கட்ட சிகிச்சை பெற்று, பின் னர் மேல் சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அமைச் சர் துரைகண்ணுக்கு செய் யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டது.இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நுரையீரலில் தொற்று அதிகரித்ததால் உடல்நிலை கவலைக்  கிடமானது. இதனால் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி மூலம் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.உயிர் காக்கும் கருவிகளுடன் மிக அதிக சிகிச்சை கொடுத்து வரும் நிலையிலும் முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடு மிகவும் மோசம் அடைந்துள்ளது  என்று காவேரி மருத்துவமனை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.