tamilnadu

நவம்பர் 15-க்குள் பயிர் காப்பீடு

சம்பா பருவத்தில் அனைத்து விவசாயி களும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- சென்னை தலைமை செயலகத்தில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.  பன்னீர்செல்வம் தலைமையில் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அக்.31 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு களின்படி, நவம்பர் 15 ஆம் தேதிக்கு முன்பு  மழை பொழிவு பெறப்படின், குறுகிய கால நெல் பயிர் ரகங்கள் ஆடுதுறை 45, 53, 56, 57, கோ 51. அம்பை 16 போன்ற  இரகங்களை நேரடி விதைப்பு முறையில் பயிரிடலாம். பருவமழை பொய்த்தால், குறு கியகாலப் பயிர்களான பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களை, மார்கழிப்பின் பட்டத்தில் சாகுபடி செய்யலாம்.

தற்போது, நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்களில் வறட்சி ஏற்படும் பட்சத்தில் வறட்சியைத் தாங்கும் தன்மையை ஏற்படுத்தும் பிங்க் பிராக்மெண்டெட் ஃபேக்கல் டிவ் மெத்தைலோ ட்ரோஃப் என்ற  உயிரினக் காரணியை ஒரு லிட்டருக்கு ஒரு  மில்லி என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

நிலத்தடி நீரை (கிணறுகள். உறைக் கிணறுகள். ஆழ்துளை குழாய்க் கிணறுகள்) தேவைக்கேற்றவாறு. சிக்கனமாக விவசாயி கள் பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படு கிறது.

சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் 15.11.2023 க்குள் பயிர் காப்பீடு செய்ய கேட்டுக்  கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.