tamilnadu

img

குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,850 ரூபாய் வழங்க வேண்டும் சென்னையில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் தர்ணா

சென்னை, டிச. 10 - குறைந்தபட்ச ஓய்வூ தியம் 7 ஆயிரத்து 850 ரூபாய் வழங்க வேண்டும் என வலி யுறுத்தி செவ்வாயன்று (டிச.10) சென்னையில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா நடத்தினர். திமுக தேர்தல் வாக்கு றுதியில் சத்துணவு, அங்கன் வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்கப்படும். குறைந்தபட்ச ஓய்வூதியம் பணிக்கொடை வழங்கப் படும் என்று கூறப்பட்டுள் ளது.

மாநில அரசு ஓய்வூ தியர்களுக்கு 7 ஆயிரத்து 850 ரூபாய் ஓய்வூதியம் வழங் கப்படுகிறது. எனவே, சத்து ணவு அங்கன்வாடி ஓய்வூதி யர்களுக்கும் ரூ.7 ஆயிரத்து 850 ரூபாய் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம், மருத்துவப்படி, இலவச மருத்துவக் காப்பீடு, குடும்ப நல நிதி போன்றவற்றை வழங்க வேண்டும், பொங்கல் பரிசு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், பண் டிகை முன்பணம் 4 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், ஈமச்சடங்கு நிதி ஆகிய வற்றை தர வேண்டும்,

காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் வாயிலாக செயல்படுத்த வேண்டும், பணி ஓய்வு பெறும் நாளிலேயே பண ப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியு றுத்தி இந்த போராட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை தமிழ் நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன் தொடங்கி வைத்தார்.

கோரிக்கைகளை விளக்கி சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ராம மூர்த்தி பேசினார். போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் ஜெய ச்சந்திரன், சென்னை மாவட்டத் தலைவர் பி.எஸ். அப்பர், சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுச்செய லாளர் அ.மலர்விழி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர்கள் ம.அந் தோணிசாமி (வடசென்னை) தென் சென்னை மாவட்டத் தலைவர் கோபிநாத் ஆகி யோர் பேசினர். மாநிலத் தலைவர் ச.டேனியல் ஜெயசிங் நிறை வுரையாற்றினார். ஓய்வூ தியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சி.ராமநாதன் நன்றி கூறினார்.