tamilnadu

img

மேகதாது அணை திட்டத்தை தடுக்க சட்ட நடவடிக்கை அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

சென்னை, ஆக.24- தமிழகத்தின் அனுமதி இல்லாமல் காவிரியின் குறுக்கே கர்நாடகாவால் மேகதாது அணையைக் கட்ட முடி யாது என துரைமுருகன் தெரிவித்துள்  ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது வில் அணை கட்டுவதற்காக சுற்றுச் சூழல் அனுமதி கேட்டு ஒன்றிய சுற்  றுச் சூழல் அமைச்சகத்திடம் கர்நாடக  அரசு மீண்டும் விண்ணப்பம் செய் துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும்  எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுரு கன் விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது, “கர்நாடக அரசு மேக தாதுவில் அணை கட்ட மேற்கொண்டு வரும் முயற்சிகளை, தமிழக அரசு  தொடக்கம் முதலே தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்த திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளது. வழக்குகள் அனைத்தும் நிலுவை யில் உள்ளன” என்று கூறிய அவர், “மேகதாது அணை திட்டத்தையோ அல்லது வேறு எந்த திட்டத்தையோ  மேற்கொள்ள கர்நாடகாவிற்கு எவ்வித  அனுமதியும் அளிக்க கூடாது என ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு மூன்று முறை பிர தமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டா லின் மனு அளித்துள்ளார் என்றும், கடந்த 2022ஆம் ஆண்டு விரிவாக கடிதம் எழுதியுள்ளார்” என சுட்டிக் காட்டியுள்ளார்.

கர்நாடக அரசு அதன் 2022-2023 நிதி நிலை அறிக்கையில் மேகதாது அணை  திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்துள் ளதாக தெரியவந்ததாக கூறிய அவர்,  “சட்டமன்றத்தில் கர்நாடக அரசின் இந்த செயலுக்கு 2022 மார்ச் மாதம்  அன்று கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்  டது. இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்  கக் கூடாது என ஒன்றிய அரசையும்,  காவிரி நீர் மேலாண்மை ஆணை யத்தையும், வலியுறுத்தி தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.” என்று விவரித்தார். மேலும் தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளையும் விரி வாக குறிப்பிட்டுள்ள அவர், “மேக தாது அணை தொடர்பாக தமிழக அரசு  தாக்கல் செய்துள்ள மனுக்கள் விசா ரணைக்கு வரும்போது, வலுவான வாதங்கள் முன் வைக்கப்படும். காவிரி  நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பி லும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பி லும், மேகதாது அணைக்கு அனுமதி  அளிக்கப்படவில்லை. மேலும், மேக தாது அணையை வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல், காவிரி படுகை மாநிலங்களின் ஒப்பு தல் ஆகியவற்றை பெறாமல் கட்ட முடி யாது. மேகதாது அணைத் திட்டத்தை தடுத்து நிறுத்த, விவசாயிகளின் நலன் காக்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும், சட்டபூர்வமான நட வடிக்கைகளையும் தொடர்ந்து மேற்  கொண்டு வருகிறது” என்று குறிப் பிட்டுள்ளார்.