tamilnadu

img

தூய்மை பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை தரும் மேஸ்திரிகளை கைது செய்ய வேண்டும்

தூய்மை பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை தரும் மேஸ்திரிகளை கைது செய்ய வேண்டும்

சிஐடியு மத்திய சென்னை மாவட்டச்  செயலாளர் சி.திருவேட்டை வலியுறுத்தல்

சென்னை,ஏப்.30 - பெண் தூய்மைப் பணி யாளர்களை மிரட்டி பாலி யல் இச்சைக்கு பணிய வைக்கும் 7வது மண்டல மேஸ்திரிகளை கைது செய்ய வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சிஐடியு மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெருநகர சென்னை மாநகராட்சி 7வது (அம்பத்தூர்) மண்டலத்தில் ஒப்பந்த தூய்மை பணி செய்யும் பெண் தொழி லாளிகளுக்கு மேஸ்திரி கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக நாளிதழ்க ளில் வந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பல மண்டலங்களில் இந்த நிலைமை உள்ளது. மாநகராட்சி உருவாக்கியி ருக்கின்ற பணிச்சூழலும், பாதுகாப்பின்மையும், ஊழல் முறைகேடுகளுமே இந்த இழிநிலைக்கு காரணம். மாநகராட்சியில் குப்பைக் கழிவுகளை அகற்றும் வேலையில் 20 ஆயிரத்து 134 தொழி லாளர்கள் வேலை செய்கின்றனர். இதில் 70 சதமானோர் பெண்கள். 5 ஆயிரத்து 947 பேர் மட்டுமே (4ல் ஒரு பங்கு) நிரந்தர தொழி லாளர்கள். நிரந்தர மற்ற பெண் தொழிலாளர்கள் வேலையை காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டி யிருக்கிறது. வருகைப் பதிவேட்டை யும், யார் என்ன வேலை செய்ய வேண்டுமென தீர்மானிப்பதையும் மேஸ்திரிகளிடம் அதிகாரி கள் விட்டுள்ளனர். எனவே, தனது பாலியல் இச்சைக்கு பெண்களுக்கு நிர்பந்தம் கொடுப்பது மேஸ்திரிகளுக்கு எளிதாக உள்ளது. தவறு செய்யும் மேஸ்திரி மீது அதி காரிகளிடம் புகார் செய்தாலும் அவர்கள் கண்டு கொள்வதில்லை. மண்டலத்திற்கு ஒதுக்கப்பட்ட தொழிலாளி களை விட குறைவான ஆட்களை வைத்து மேஸ்திரிகள் வேலையை முடித்து கொடுக்கின்றனர். ஆனால், மண்டலத்திற்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கை யில் பணமும் வந்து விடு கிறது. எனவே, மன்ற உறுப்பினர், மண்டலத் தலைவர், அதிகாரிகள் என கூட்டுச் சேர்ந்து பணத்தை பிரித்துக் கொள்கின்றனர். ஒப்பந்தமுறை, தனியார் மயம் இந்த ஊழலுக்கு வசதி யாக உள்ளது. மேஸ்திரிகள் அரசு அதி காரிகள் அல்ல. ஒப்பந்த தொழிலாளர்களில் சிலரை மேஸ்திரியாக்கி இந்த ஊழலை செய்கின்றனர். இதன் காரணமாக, பெண் தொழிலாளர்கள் கண்ணிய மாக வேலை செய்ய முடிய வில்லை. எனவே, இதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியிட பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். ஆனால், மாநகராட்சி பெயரளவிற்கு தலைமை அலுவலகத்தில் ஒரு குழு வைத்துள்ளது. 15 ஆயிரத்திற்கு அதிகமாக பெண்கள் வேலை செய்யும் இடத்தில் ஒரு குழுதான் என்று இருப்பது சரியா? இப்படி ஒரு குழு இருப்பது தொழிலாளிகளுக்கு தெரி யுமா? ஒரு தொழிலாளியால் நெடுந்தொலைவு சென்று புகார் அளிக்க இயலுமா? ஒப்பந்த தொழிலாளியால் புகார் அளித்துவிட்டு நிம்மதியாக பணியில் இருக்க முடியுமா? எனவே, குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை  வேண்டும். பணிச்சூழலை மாற்றி பாதுகாப்பை உருவாக்க வேண்டும். தனியார்   மயத்தை கைவிட வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். மண்டல வாரியாக விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.