சென்னை, பிப்.26- மக்களவைத் தேர்தலையொட்டி, அதி காரிகளின் இடமாற்றம் தொடர்பாக தலை மைச் செயலாளர், டிஜிபி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு கடி தம் எழுதியிருப்பதாக தலைமைத் தேர் தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரி வித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென் னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் புதன்கிழமையில் தேர்தல் நடத்துமாறும், வார இறுதி நாட்க ளிலோ, வாரத் தொடக்க நாளிலோ வாக்குப்பதிவை நடத்த வேண்டாமென வும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி யுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஜூன் வரையிலான அரசு விடுமுறை நாட்கள், உள்ளூர் விழாக் கள், மதம் சார்ந்த பண்டிகைகள் குறித்த விவரங்கள் இந்திய தேர்தல் ஆணை யத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில், பண்டிகைகள், விடுமுறை நாட்கள் இல் லாத நாளை தேர்வு செய்து மக்களவைத் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப் படும்.
அனைத்து மாநில தேர்தல் அதிகாரி கள் உடன் ஆலோசனை முடிந்த பிறகே தேர்தல் தேதி குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படும். மக்களவை தேர்தலை ஒட்டி தொகுதிகளுக்குள் ஏற்கெனவே பணியாற்றிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அரசுக்கு கடிதம் அனுப்பி யுள்ளோம்.
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணை யம் உத்தரவிட்டதை தொடர்ந்து தலை மைச் செயலாளர், டிஜிபி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் கடி தம் அனுப்பப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவம் தமிழ் நாடு வருகிறது.
200 கம்பெனி துணை ராணுவத்தினர் மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளனர். கடந்த தேர்தலில் 160 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர்.