tamilnadu

மக்களவை தேர்தல் கூட்டணி: கமல்ஹாசன் பேட்டி

சென்னை, ஜன.23- மக்களவைத் தேர்தலை சந்திக்க  அனைத்து கட்சிகளும் ஆயத்த மாகி வருகின்றன.

அந்த வகையில்  கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை சந்திக்க  தயாராகி வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின்  நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு  கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாயன்று (ஜன.23) நடை பெற்றது.

அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு பொதுச்செயலாளர் அருணாசலம், மாநில செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ.இளங்கோ, கவிஞர்  சினேகன், நடிகை ஸ்ரீபிரியா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

“மக்களவைத் தேர்தல் கூட்டணி பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். விரைவில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். கூட்டணி அமைத்து நாம் தேர்த லில் போட்டியிட்டாலும் கட்சி நிர்வாகி கள் பூத் கமிட்டிகள் அமைப்பதில் தீவிரம் காட்ட வேண்டும். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.  கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற் றிக்காக உழைக்க வேண்டும்.

” -இவ்வாறு கமல்ஹாசன் பேசிய தாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்த னர். இந்த கூட்டம் தொடர்பாக துணை  தலைவர் மவுரியா கூறும்போது, “மக்களவைத் தேர்தலில் மேற் கொள்ளப்படவேண்டிய பிரச்சார வியூகம் மற்றும் தலைவரின் சுற்றுப்  பயணம் ஆகியவை பற்றி விவாதிக் கப்பட்டது”என்றார்.