tamilnadu

img

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ஜூன் 1 முதல் உரிமம் ரத்து!

சென்னை, மே 29- சாலை விபத்துகளை குறைக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தில் புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.சாலை விபத்துக்களை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் எண்ணற்ற விழிப்புணர் வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து விபத்தை தடுப்பதற்கான நட வடிக்கைகளையும் மேற்கொண்டு வரு கிறது. தமிழ்நாட்டில் சமீப காலமாக 18  வயதுக்கு குறைந்த சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் அதிக விபத்து ஏற்படுகிறது.

இது குறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படு த்தினாலும் கூட விபத்து குறையவில்லை. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் காயமடைந் தால் அல்லது இறந்தாலோ வாகனத்தை மைனர் அல்லது யாரேனும் இயக்கினால் மட்டுமே வாகன உரிமையாளர்களிடம் இருந்து இழப்பீடு பெற முடியும் என்று மத்திய மோட்டார் வாகன சட்டம் 2019-ஐ திருத்தம் செய்ததை அடுத்து தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், 18 வயது பூர்த்தியடை யாத சிறுவர்கள் கார் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும். வாகனத்தின் ஆர்.சி.யை ரத்து செய்யும் விதிமுறை ஜூன் 1ம் தேதி முதல் அமலாகிறது. மேலும் வாகனம் ஓட்டி பிடி படும் சிறார்களுக்கு ரூ.25,000 அபராதம், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப் படாது.

;