சென்னை, செப். 2 - மாரி செல்வராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியானது ‘வாழை’ திரைப்படம் அனைத்து தரப்பினர் மத்தி யில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலி னும், ‘வாழை’ படத்தைப் பாராட்டி, ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்க ளின் வாழ்வியலையும், அவர்களின் வலியையும் பேசும் ‘வாழை’ படத்தை, சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜூக்கு அன்பின் வாழ்த்துக்கள்.
பசியுடன் சிவனணைந்தன் தவித்த போது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றி விட்டார் மாரி!
பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தனும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கி பயணத்தை தொடர்வோம்!
தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்து வரும் மாரி செல்வராஜூக்கு மீண்டும் வாழ்த்துகள்!” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வரின் பாராட்டிற்கு மாரி செல்வராஜூம் தனது நன்றியைத் தெரி வித்துள்ளார். “என் முதல் படமான பரி யேறும் பெருமாளிலிருந்து கர்ணன், மாமன்னனை தொடர்ந்து இன்று வாழை வரை என் அத்தனை படங் களையும் பார்த்துவிட்டு உடனே அழைத்து பெரும் ப்ரியத்தோடு என் படைப்பையும், என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண் டாடி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலி னுக்கு என் இதயம் நிறைந்த நன்றி களை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.