கோயம்பேடு அங்காடி வளாகம் ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்படும்
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் ரூ. 10 கோடி யில் மேம்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற சென்னைப் பெரு நகர் வளர்ச்சிக் குழுமம் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பிறகு பேசிய அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:- பாரதி கல்லூரி கூடுதல் வசதிக்கு ரூ.25 கோடி மேம்படுத்தப் படும். சென்னை பிரகாசம் சாலை யில் 7.70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பாரதி பெண்கள் கல்லூரியில் புதிய ஆய்வகங்கள், கூடுதல் வகுப்பறைகள் அமைத்தல் மற்றும் வகுப்பறைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். அரசுப் பள்ளிகள் மேம்பாட்டுக்கு ரூ.25 கோடி சென்னையில் மங்களபுரம் நடுநிலைப் பள்ளி, திரு.வி.க நகர், ஏகாங்கிபுரம் நடுநிலைப் பள்ளி, திரு.வி.க நகர், லட்சுமிபுரம் மேல்நிலைப்பள்ளி, புழல், 4 காசி பாலசுப்ரமணிய செட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. செங்குன்றம், ஜெய் கோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப்பள்ளி, மாத வரம், திருவள்ளுவர் நகர் தொடக்கப்பள்ளி, ஆர்.கே. நகர், ஜி.கே.எம். காலனி அரசுப் பள்ளி, கொளத்தூர், ஜெய் கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. விருகம்பாக்கம், அரசு மேல்நிலைப்பள்ளி, எம்.ஜி.ஆர். நகர், விருகம்பாக்கம் ஆகிய 9 அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வ கங்கள், போதிய இருக்கை வசதிகள், கணினி வசதிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் ரூ. 25 கோடியில் மேம்படுத்தப்படும். சென்னையில் உள்ள ஆதி திரா விடர் நல அரசு பெண்கள் பள்ளி, கன்னிகாபுரம், ஆதி திராவிடர் நல அரசு உயர்நிலைப்பள்ளி, புளியந் தோப்பு, ஆதிதிராவிடர் நல அரசு தொடக்கப்பள்ளி, வெங்கடேசபுரம், ஆதிதிராவிடர் நல அரசு தொடக்கப் ப ள்ளி, செங்குன்றம் ஆகிய 6 ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், போதிய இருக்கை வசதிகள், கணினி வசதிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் ரூ. 5 கோடி யில் மேம்படுத்தப்படும். ரூ. 40 கோடியில் முதல்வர் படைப்பகங்கள் வடசென்னையில் உள்ள செரி யன் நகர், அயனாவரம், சுப்புராயன் தெரு, பக்தவத்சலம் பூங்கா, சண்முகம் தெரு, வெங்கடேசபுரம், தண்டையார்பேட்டை நெடுஞ் சாலை, அம்பத்தூர், மங்களபுரம், கோடம்பாக்கம், வால் டாக்ஸ் சாலையில் உள்ள ராட்லர்ஸ் தெரு , மேஜர் பாசு தெரு, சிந்தனை சிற்பி சிங்கரவேலர், எருக்கஞ்சேரி ஆகிய 13 இடங்கள் மற்றும் பிற பகுதிகளில் 2 இடங்களி லும், அதிவேக இணை யம், போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர்களுக்குத் தேவையான வசதிகள் கொண்ட கற்றல் மையங்கள் மற்றும் பகிர்ந்த பணியிட வசதிகளைக் கொண்ட முதல்வர் படைப்பகங்கள், ரூ. 40 கோடியில் அமைக்கப்படும். பேருந்து நிறுத்தங்கள் வடசென்னையில் பெரம்பூர், ராயபுரம், கொளத்தூர், மற்றும் துறைமுகம் ஆகிய பகுதிகளில் குளிர்சாதன வசதி மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். மேலும், சென்னையில் 7 பன்னோக்கு மையங்கள் ரூ. 45 கோடியில் அமைக்கப்படும். சென்னையில், சத்தியமூர்த்தி சாலை, சேத்துப்பட்டு, சத்யமூர்த்தி சின்ன சேக்காடு தேவராஜ் நகர், மணலி, ஷேக் மேஸ்திரி தெரு, இராயபுரம், கக்கன்ஜி நகர், வியாசர்பாடி, நாகிரெட்டி தோட்டம், கிண்டி, நொளம்பூர் தாலுகா அலுவலக சாலை, மதுர வாயல், பெருங்குடி ஆகிய இடங்களில் குளிர்சாதன அரங்கம், உணவுக்கூடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் ஏழு பன்னோக்கு மையங்கள் ரூ. 45 கோடியில் அமைக்கப்படும். 6 அமுதம் அங்காடிகள் பெரியார் நகர், சைதாப்பேட்டை தாடண்டர் நகர், பல்லாவரம், சித்தாலப்பாக்கம், ராயபுரம் மற்றும் வில்லிவாக்கம் சிட்கோ நகர் ஆகிய ஆறு இடங்களில் அமுதம் அங்காடிகள், ரூ. 22 கோடியில் அமைக்கப்படும். சென்னை, வண்ட லூர், கீரப்பாக்கத்தில், 5 ஏக்கர் பரப்பளவில், உணவுப் பாது காப்பை உறுதிப்படுத்தும் வகை யில், உணவுப் பொருள் கிடங்கு ரூ. 11 கோடி மதிப்பீட்டில் அமைக்கப் படும். தீவுத் திடலில் நிரந்தர பொருட்காட்சி “சென்னை தீவுத்திடலில் நிரந்தர பொருட்காட்சி அமைக்கப்படும். நிரந்தர பொருட்காட்சி அமைக்கப் படுவதால் தொழில்முனைவோர்கள் வாழ்வாதாரம் மேம்படும். ரூ.25 கோடியில் பாரதி மகளிர் கல்லூரி யில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். சென்னையில் ரூ.40 கோடி செலவில், 15 முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்படும். வடசென்னையில் ரூ.8 கோடி யில் 4 இடங்களில் குளிர் சாதன பேருந்து நிறுத்தம் அமைக்கப் படும். 6 அமுதம் அங்காடிகள் அமைக்கப்படும் என்று அறி வித்தார். இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.