tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பத்திரிகையாளர் குடும்ப உதவிநிதி ரூ.10லட்சமாக உயர்வு  அரசாணை வெளியீடு

சென்னை,டிச.18- பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித்திட்டத்தில் உதவித் தொகையை உயர்த்தி,தமிழ்நாடு அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் முத லமைச்சருக்கு விடுத்துள்ள பல்வேறு கோரிக்கைகளில் ஒன்றாக பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால் அவர்களு டைய குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதியினை ரூபாய் பத்து லட்சமாக உயர்த்த வேண்டும் என கோரியிருந்தனர்.

அரசின் கவனமான பரிசீலனைக்குப்பின்னர், முத லமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது, பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தினால்  அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது  இயற்கை எய்தினால் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும். 10 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தினால்  ரூ.5 லட்சம் என்றும், 5 ஆண்டுகள் பணி புரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தினால் ரூ.2  லட்சத்து 50 ஆயிரம்  என்றும் நடைமுறையிலுள்ள விதிகளின்படி, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிடுகிறது.

4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை  எச்சரிக்கை!

சென்னை, டிச. 18 - தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தமிழ் நாட்டை நோக்கி நகர்வதால் வியாழக்கிழமை (டிச.19) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்ப தாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து ள்ளது.  மேலும்  பலத்த காற்று வீசும் என்பதால் புதுக் கோட்டை, இராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மற் றும் விசைப் படகு மீனவர் கள் கடலுக்குச் செல்ல வேண் டாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.