tamilnadu

img

ஜவ்வாதுமலையின் 25ஆம் ஆண்டு கோடைவிழா

ஜவ்வாதுமலையின் 25ஆம் ஆண்டு கோடைவிழா

திருவண்ணாமலை,ஜூன் 28-  திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில், 25வது ஆண்டு கோடைவிழா ஜமுனா மரத்தூரில் உள்ள செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழ மையன்று (ஜூன் 28) தொடங்கியது. இவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலு, 18,062 பயனாளிகளுக்கு ரூ.132 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, விழா அரங்கில் நிறுவப்பட்டி ருந்த பல்துறை அரசு பணிவிளக்கக் கண்காட்சி களை சுற்றுலா துறை அமைச்சர் இரா. ராஜேந்திரன் திறந்து வைத்து பார்வையிட்டார். விழாவுக்கு மாவட்ட ஆட்சி யர் க. தர்ப்பகராஜ் தலைமை வகிக்க, துணை சபாநாய கர் கு. பிச்சாண்டி முன்னிலை வகித்தார். வருவாய் அலு வலர் இரா. ராமபிரதீபன் வரவேற்றார். கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,300 அடி உய ரத்தில் அமைந்துள்ள ஜவ்வாது மலை, தேன் இளவரசி என அழைக்கப்படும் சுற்றுலா தலமாக பெயர் பெற்றது. விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.என். அண்ணாதுரை, பெ.சு.தி.சரவணன், மு.பெ.கிரி, ஒ.ஜோதி, காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர், வன அலுவலர் பூ. சுதாகர், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் இரா. மணி, அரணிகோட்டாட்சியர் சீ.சிவா, உதவி இயக்குநர் வடிவேலன், மகளிர் திட்ட இயக்குநர் சரண்யாதேவி, வேளாண் இணை இயக்கு நர் கோ. கண்ணகி, வட்டார வளர்ச்சி அலுவலர் நீ. சக்திவேல், மற்றும் அரசு துறை அதிகாரிகள், சுற்று லாப் பயணிகள், மலை வாழ் மக்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவை யொட்டி நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள் நடை பெற்றது. முடிவில் மாவட்ட சுற்றுலா துறை அலுவலர் வே. கார்த்திக் நன்றி தெரி வித்தார்.