சென்னை, மே 10 - கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இங்கு ரூ.100 கோடி செலவில் வள்ள லார் சர்வதேச மையம் அமைக்கப் படும் என கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப் பட்டிருந்தது.
அதன்படி மு.க. ஸ்டாலின் முதல்வரானதும், வள்ளலார் சர்வதேச மையத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கிடையே, சத்தியஞான சபை பெருவெளியில் பக்தர் களின் வழிபாட்டிற்கு இடை யூறாக சர்வதேச மையத்தை அமைக்கக் கூடாது என்றும், கட்டு மானங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப் பட்டன. சர்வதேச மையம் அமைக்க ஆதரவாகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, சர்வதேச மையம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்தை வரவேற் கும் அதேநேரத்தில், வடலூரில் தைப் பூசத்தின் போது, வள்ள லாராலேயே கொடியேற்றும் உரிமை வழங்கப்பட்ட பார்வதி புரம் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும்; வள்ளலா ருக்கு பார்வதிபுரம் கிராம மக்கள் கொடுத்த 105 ஏக்கரில் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ள 45 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும்; இதுதொடர்பான கோரிக்கை களை முன்வைத்து போராடி யவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
இதனிடையே வள்ளலார் சர்வதேச மையம் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகள் மே 10 அன்று நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, “வடலூரில் வள்ள லார் சர்வதேச மையம் அமைப்ப தில் என்ன பிரச்சனை?” என நீதிபதி கள் கேள்வி எழுப்பினர். மேலும், “அரசின் திட்டம் ‘வள்ளலார் தத்து வங்களுக்கு விரோதமானவை’ என நிரூபித்தால் மட்டுமே அர சின் முடிவில் நீதிமன்றம் தலை யிட முடியும்” எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “106 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட சத்ய ஞான சபை அப்படியே இருக்க வேண்டும் என்பதுதான் வள்ள லார் விருப்பம்” என்றும், “பெரு வெளியில் கட்டடம் கட்டப்படுவது வள்ளலார் விருப்பத்திற்கு மாறானது” என்றும் வாதிட்டார். அப்போது, “அனைத்து அனுமதிகளும் பெற்ற பிறகே வள்ளலார் சர்வதேச மையம் கட்டப்படும்” என்று தமிழக அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, சத்திய ஞான சபைக்கு சொந்தமான 106 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி, அந்த நிலங்களை மீட்கவும், அறங்காவலர்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கு மாறு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூன் 24 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.