tamilnadu

img

இது மேக வெடிப்பு அல்ல: அதி கனமழை

சென்னை, டிச.18 - தென் மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பொழிந் துள்ளது. தென்காசியில் 60 விழுக்கா டும் தூத்துக்குடியில் 80 விழுக்காடும் இயல்பைவிட கூடுதலாக மழை பொழிந்து உள்ளது. இது அதி கனமழையே தவிர மேக வெடிப்பு அல்ல என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு  மையத்தின் தென் மண்டல தலைவர்  பாலச்சந்திரன் சென்னையில் திங்க ளன்று (டிச.18) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நில வும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. இதனால் 39 இடங்களில் அதி கனமழையும், 33  இடங்களில் மிக கனமழையும், 12  இடங்களில் கனமழையும் பதிவாகி யுள்ளது. அதிகபட்சமாக காயல் பட்டினத்தில் 95 செ.மீ. மழை பதிவாகி யுள்ளது”என்றார்.

அடுத்து வரும் இரண்டு நாட்களை  பொறுத்தவரையில் தென் தமிழ்நாட்டில் அநேக இடங்களில், வட தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும்  குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

5 விழுக்காடு அதிகம் மழை
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்.1 முதல் டிச.18 வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 44 செ.மீ. இந்த காலகட்டத்தின் சராசரி அளவு 42 செ.மீ.. இது ஐந்து விழுக்காடு இயல்பை விட அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த  வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், “வளிமண்டல சுழற்சி யால் இருந்து இதுவரை இந்த அளவுக்கு மழை எதிர்பார்த்தது கிடை யாது. இது மேக வெடிப்பு கிடையாது. ஒரு மணி நேரத்தில் 10 செ.மீக்கும் மேல் மழை பெய்தால் மேக வெடிப்பு  எனலாம். ஆனால், இது அதி கனமழை.  எனக்கு தெரிந்தவரை இந்த அளவுக்கு அதி கனமழை பரவலாக அனைத்து இடங்களிலும் பெய்தது இல்லை. தற்போதைய சூழ்நிலையை கணித்தே ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பரவலாக அதி  கனமழை பெய்துள்ளது. வாய்ப்பு அடிப்படையில் எச்சரிக்கை விடுக்கப் படுகிறது. உறுதியாக எதையும் சொல்ல முடியாது. 21 செ.மீக்கு மேல் மழைப்பொழிவு இருக்கும் பட்சத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்படும்”

இனிவரும் காலங்களில் வட கிழக்குப் பருவ மழையின் போது இதுபோன்ற தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார். என்றார்.