tamilnadu

இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு

சென்னை, ஜன. 4- தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி களில் ஆசிரியர் பணி நியமனங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்று வருகிறது.

இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாந கராட்சி அரசு தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளில் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். தற்போதைய சூழலில் ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் நியமனத் தேர்வு என இரண்டு வகையான தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரி யம் நடத்தி வருகிறது. இந்நிலை யில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நிலவரப்படி இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 1,000 காலியாக இருப்பதாக தெரி விக்கப்பட்டது.

இதை நேரடி நியமனம் மூலம் நிரப்பிக்கொள்ள தேர்வு வாரி யத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் 2023-24ஆம் ஆண்டில் 8,643 பணியிடங்கள் கண்டறியப் பட்டன. அதில் 500 இடைநிலை ஆசி ரியர் காலிப் பணியிடங்களை ஆசி ரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப தொடக்க கல்வி இயக்குநருக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

இதை ஏற்கெனவே அறிவிக்கப் பட்ட 1,000 காலிப் பணியிடங்களுடன் சேர்த்தால் 1,500 ஆகும். இந்த பணி யிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடி நியமனம் மூலம் இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைப்பால் அனுமதிக்கப்பட்ட அளவை விட உபரியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்ய வேண்டும். அதாவது அதிக காலியிடங்கள் இருக்கும் மாவ ட்டங்களில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் நியமிக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியருக்கான 1,500 பணியிடங்களை நிரப்பும் போது கிடைக்கும் தேர்வர்களை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக இருக்கும் மாவட்டங்களில் முன்னுரிமை அடிப் படையில் நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு முதல்முறை பணி நியமனம் வழங்கப்பட்டதும், குறைந்தது 5 ஆண்டுகள் அதே  மாவட்டத்தில் தொடர்ந்து பணி புரிய வேண்டும். இந்த நிபந்தனை களை நியமன ஆணையில் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிடப்பட் டுள்ளது.