tamilnadu

பத்திரிகையாளர் ஓய்வூதியத்திற்கான வருமான உச்ச வரம்பு அதிகரிப்பு!

சென்னை, ஜூலை 25 - பத்திரிகையாளர் நல வாரியத்தின்  7-ஆவது கூட்டம் செய்தித்துறை அமைச் சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில்  செவ்வாயன்று (ஜூலை 23) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பத்திரிகையாளர்  ஓய்வூதியம் கோரி வரப்பெற்ற 18  விண்ணப்பங்க ளும், குடும்ப உதவி நிதி  கோரி வரப்பெற்ற 6 விண்ணப்பங்க ளும் பரிசீலிக்கப்பட்டு அரசுக்கு பரிந்து ரைக்கப்பட்டன.

அங்கீகார அட்டை, பேருந்து பயண  அட்டை, செய்தியாளர் அட்டை அல்லாத  ஆசிரியர், உதவி ஆசிரியர், செய்தியா ளர், புகைப்பட கலைஞர், ஒளிப்பதிவா ளர், பிழை திருத்துபவர் மற்றும் வட்டார  அளவில் பணியாற்றுவோர், காலமுறை  இதழ்களில் பணிபுரியும் பத்திரிகையா ளர்களையும் நல வாரிய உறுப்பினர் களாக சேர்க்க முடிவெடுக்கப்பட்டது.

மேலும், பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து நிலையிலான அலுவலர்களையும் மஜிதியா ஊதியக்  குழுவின் பரிந்துரையின் அடிப்படை யில், பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினராக சேர்ப்பது குறித்து விவா திக்கப்பட்டது. விபத்து மரண நிதியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட  பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த முடி வுகள் எடுக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் சாமி நாதன், “பத்திரிகையாளர் நல  வாரியம் தோற்றுவித்து, 3270 உறுப்பி னர்கள் சேர்க்கப்பட்டு, வாரியத்தின்  மூலம் 97 பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் 38 பத்திரிகையாளர் களின் குடும்பத்திற்கு குடும்ப உதவி நிதி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டு வருகின்றன” என்றார்.
பத்திரிகையாளர்கள் குடும்பங்களி லிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை ஏற்று பத்திரிகையாளர்கள் ஓய்வூதி யம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது அனைத்து வகையிலும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 2  லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்படுவ தாக தெரி வித்தார். 

பத்திரிகையாளர் நலவாரியக் குழு வின் உறுப்பினர்களாக அச்சு, காட்சி மற்றும் காலமுறை இதழ்களில் பணி புரிபவர்களை உறுப்பினர்களாக சேர்ப் பது குறித்து பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித் தார்.

மேலும், நலவாரியத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை  போன்றவை உயர்த்தப்பட வேண்டும்  என்று கோரிக்கைகள் வந்திருக் கின்றன. இக்கோரிக்கைகளை ஆய்வு செய்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இக்கூட்டத்தில் செய்தி மக்கள் தொ டர்புத்துறை இயக்குநர் இரா. வைத்தி நாதன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற  வளர்ச்சித் துறை இணைச் செயலாளர்  ஷ்ரவண் குமார் ஜடாவத், பத்திரிகையா ளர் நல வாரியத்தின் அலுவல் சாரா  உறுப்பினர்கள் ஆர்.எம்.ஆர்.ரமேஷ்,  பி. கோலப்பன், லட்சுமி சுப்பிரமணியன்,  செ. கவாஸ்கர், எம்.ரமேஷ், அலுவல் சார் உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர்  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.