tamilnadu

நவாஸ்கனி எம்.பி.யின் கொரியர் அலுவலகம் உட்பட 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை, மார்ச் 14- தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கிவிட்டது. இந்தியா கூட்டணி கட்சிகள் தொகுதி ஒதுக்கீட்டை முடித்து வேட்பாளர்கள் தேர்வில் மும்முரம் காட்டி வரு கின்றன. இந்த கூட்டணியில் தொகுதி யை ஒதுக்கிய அடுத்த சில நிமிடங்களி லேயே முதன் முதலாக வேட்பாளரை அறிவித்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகும்.

இந்நிலையில் அந்தக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனிக்கு  சென்னை பல்லாவரத்தில் இருக்கும்  எஸ்.டி. கொரி யர் தலைமை அலுவலகத்தில் அம லாக்கத்துறையினர் வியாழக்கிழமை (மார்ச் 14) காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். 

இந்தியா கூட்டணி சார்பில் ராம நாதபுரத்தில் மீண்டும் முஸ்லிம் லீக் கட்சி யின் வேட்பாளராக நவாஸ் கனி அறி விக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியை பாஜகவும் குறி வைத்துள்ளது.

இந்த நிலையில், சட்டவிரோத பணபரிமாற்றம் என்ற பெயரில் ராமநாதபுரத்தில் உள்ள நவாஸ் கனி எம்பி அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அதேபோல் பல்லாவரத்தில் உள்ள அவ ரது எஸ்.டி.கொரியர் மற்றொரு ஹோட்டல் உரிமையாளர் ரியாஸ் என்பவரது அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதி காரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

மக்களவைக்கு தேர்தல் தேதி  இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப் படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சென்னை, தி. நகர், திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட இடங்களில் அம லாக்கத் துறையினர் சோதனை நடத்தி னர். 

இதில் தியாகராய நகர் பசுல்லா சாலை யில் உள்ள சாய் சுக்கிரன் என்ற நிறு வனத்தில் சோதனை நடைபெற்றது. சாய்  சுக்கிரன் நிறுவனம் தேசிய நெடுஞ்சாலை களில் பெயிண்ட் அடிக்கும் ஒப்பந்தம் எடுத்து பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.