சென்னை,ஜூன் 15- கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று (ஜூன் 15) திறந்து வைத்தார். சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டது. மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப் பட்டுள்ளன. இங்கு இதயம் , நரம்பு, இரைப்பை, சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்ட உயர் சிகிச்சைகளுக்கு மருத்து வம் அளிக்கப்படுகிறது. மருத்துவ உபகர ணங்கள் அனைத்தும் நிறுவப்பட்ட நிலையில், கடந்த 5-ந்தேதியே இந்த மருத்து வமனையை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. மருத்துவமனையை திறந்து வைத்த பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், மறைந்த பின்னும் தமிழ் சமுதாயத் திற்காக பயன்படுபவர் தான் கருணாநிதி. 15 மாதங்களில் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஒரு செங்கல் கதை உங்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை இது வரை கட்டவில்லை. கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இதயம், நரம்பு, இரைப்பை, சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு உயர் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
ஏழை எளிய மக்களின் மருத்துவ ராக இருந்தவர் கருணாநிதி. திறப்பு விழாவிற்கு வர விடாமல் குடியரசு தலைவரை தடுத்துவிட்டனர். மருத்துவ கட்டமைப்பில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. நாட்டிற்கே பல முன்மாதிரியான திட்டங்களை திமுக கொண்டு வந்துள்ளது. எம்பிபிஎஸ் மருத்துவ இடங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மக்களை தேடி மருத்துவம் மூலம் 1.46 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இரு சக்கர அவசர ஊர்தி, பச்சிளம் குழந்தை களுக்கான அவசர ஊர்தி என பல்வேறு திட்டங்கள் உள்ளது. கருணா நிதி வழியில் சோதனைகளை சாதனை களாக மாற்றுவோம். இவ்வாறு முதல்வர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்ச ர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா. சுப்பிரமணி, மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தலைமை செயலாளர் இறையன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.மிக குறுகிய காலத்தில் இந்த மருத்துவ மனை கட்டப்பட்டது குறிப்பி டத்தக்கது. முன்னதாக மருத்துவ மனையை சிறப்பாக கட்டி முடிக்க காரணமாக பொறியாளர்கள், பொதுப் பணித்துறை அதிகாரிகள், மக்கள் நல் வாழ்வுத்துறை அதிகாரிகளை முத லமைச்சர் பாராட்டி பரிசளித்தார்.