சென்னை,ஆக.30-
என்எல்சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கவில்லை எனக் கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கில் என்எல்சி நிறுவனத்தை எதிர்மனுதாரராக சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்எல்சிக்காக நிலம் கையகப் படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்டோர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், “என்எல்சிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக் காக நிலங்களின் உரிமையாளர் களுக்கு உறுதியளித்தபடி போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை.
நிலம் வழங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட வில்லை. நில உரிமையாளர்களின் மறு வாழ்வுக்கு தமிழக அரசு எந்தத் திட்டத் தையும் வகுக்கவில்லை. சட்ட விதி களின்படி, இழப்பீடு, மறுவாழ்வு, மறு குடியமர்வு நடவடிக்கைகளை மேற் கொள்ளாமல் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை முடிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தனர்.
இந்த வழக்கின் மீதான விசார ணை நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு புதனன்று நடை பெற்றது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில், தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் மட்டுமே எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள னர். எனவே, என்எல்சி தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறினர்.மேலும் என்எல்சி நிறு வனத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 4-க்கு ஒத்திவைக்கப்பட்டது.