tamilnadu

சமஸ்கிருதத்தைத் திணிக்கும் பணிநியமன விதிகளை நீக்குக! தமிழக அரசுக்கு தமுஎகச வலியுறுத்தல்

அரசு அருங்காட்சியகத் துறை யின் உதவி காப்பாட்சியர் (தொல்லியல்),  உதவி காப்பாட்சியர்  (அருங்காட்சியகம், புதுக்கோட்டை)  ஆகிய பதவிகளுக்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை (எண்: 09/2024 நாள் 26.07.2024) வெளியிட்டிருந்தது.

தமிழ்நாட்டில் உள்ள அருங்காட்சியகங்கள், தொல்லியல் பணிகளுக்கு சமஸ்கிருதப் படிப்பு  எதற்கு என்று பரவலாக கண்டனம்  எழுந்த நிலையில், அருங்காட்சி யகத்துறை தற்போது இந்த காலிப்  பணியிடங்களை திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டதாகவும் அதனால் இவற்றுக்கான தேர்வு அறிவிக்கை யினை திரும்பப் பெறுவதாகவும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (செய்தி வெளியீட்டு எண்: 88/2024 நாள் 30.07.2024) அறிவித்துள்ளது.

பின்வாங்கும் தந்திரம் 

அருங்காட்சியகத்துறை மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வா ணையத்தின் இந்த அறிவிப்பில், வருங் காலத்தில் உருவாகும் காலிப்பணி யிடங்களை நிரப்புவதற்கு சமஸ்கிரு தக் கல்வி முன் நிபந்தனையாக்கப் படாது என்கிற உறுதியளிப்பு எதுவும் இல்லாத நிலையில், இது சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிரான கண்டனத்தை மட்டுப்படுத்த தற்காலிகமாக மேற் கொள்ளப்பட்டுள்ள ஒரு பின்வாங்கும் தந்திரம் என்றே தமுஎகச கருதுகிறது. 

அருங்காட்சியம்/ தொல்லியல் சார்ந்த கல்வியும் ஆய்வு ஈடுபாடும் உள்ளவர்கள் சமஸ்கிருதக் கல்வி பெற்றிராத காரணத்தால் பணி நிய மனம் பெற முடியாமலும்,  இவர் களுக்கு மாறாக வெறும் சமஸ்கிருத மொழிக்கல்வியை மட்டும் வைத்தி ருப்பவர்கள் இந்தத் துறைகளின் பணியிடங்களைக் கைப்பற்றுவதுமாக உள்ள நிலையில் உடனடியாக மாற்றம் தேவை. அதன்பொருட்டு, காப்பாட்சி யர் பணிகளுக்கான கல்வித்தகுதியில் சமஸ்கிருதம் அவசியம் என்று அரசு அருங்காட்சியகங்களுக்கான தமிழ்நாடு பொது சார்நிலை பணிவிதி களில் உள்ள நிபந்தனையை உடனே நீக்கவேண்டும் என்று அருங்காட்சி யகத்துறையையும் தமிழ்நாடு அரசையும் தமுஎகச வலியுறுத்துகிறது. 

தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா அறிக்கை