சென்னை, மே 28- சென்னை மந்தைவெளி ராஜாகி ராமணி கார்டன் 4ஆவது தெருவில் வாடகை வீட்டில் வசித்தவர் ரகு. இவர் தனியார் ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவியும், ஸ்ரேயர் (வயது 14) என்ற மகனும் உள்ளனர். கடந்த 18ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ரகு உயிரிழந்தார். இதை யடுத்து அவரது மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவர் நந்தம்பாக்கத்தில் உள்ள முகாமில் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்ப டுத்தப்பட்டுள்ளார். மகனுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை. இதனால் 14 வயது சிறுவன் ஸ்ரேயர் மட்டும் வீட்டில் தனியாக இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அரசு அதிகாரிகள் அந்த சிறுவன் வீட்டிற்கு சென்று அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கி விட்டு, தங்கள் கடமை முடிந்துவிட்டதாகக் கருதி சென்று விட்ட னர்.
ஆனால், அதே வீட்டில் கீழ்தளத்தில் குடி யிருப்பவர்கள் தினசரி அந்த சிறுவனுக்கு உணவு வழங்கி வருகிறார்கள். அந்த சிறுவன் கூறுகையில், என்னை கர்நாடக மாநிலம் உடுப்பி யில் உள்ள தாத்தா வீட்டிற்கு அனுப்பி வையுங்கள் என பரிதாப மாகக் கூறுகிறான். 10 நாட்க ளுக்கு முன் தந்தையை இழந்த ஒரு 14 வயது சிறுவன் தாயும் உடன் இல்லாமல் எப்படி தனிமையில் இருப்பான். அவன் மனநிலை எப்படி இருக்கும் என்பது குறித்தெல்லாம் அரசு அதிகாரிகள் கவலைப்படவில்லை. எனவே, அந்த மாணவனுக்கு மருத்து வர்கள் மூலம் கலந்தாய்வு நடத்தி, அவன் விருப்பப்படி அவனது தாத்தா வீட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில, அந்தச் சிறுவன் மன உளைச்சலுக்கு ஆளாகி, படிப்பு பாதிக்கக் கூடும். அவனது தாயின் மன நிலையும் பாதிக்கக் கூடும். அந்த குடும்பத்தை பாது காக்கும் வகையில் அந்த சிறுவனின் தாய்க்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.