tamilnadu

இந்தி மொழி திணிப்பு: வைகோ, கனிமொழி எச்சரிக்கை

சென்னை, ஜூன் 1- மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மக்களவை திமுக துணைத் தலைவர் கனிமொழி எம்பி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் தினகரன், திமுக எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வைகோ (மதிமுக): இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியைப் பயிற்றுவிக்க வேண்டும். அதற்காக மும்மொழிக் கொள் கையைக் கட்டாயமாக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் தவிர இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும். ஆறாம் வகுப்பிலிருந்து இந்தி மொழியைக் கட்டாயமாகப் பயிற்றுவிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது. பண்டித ஜவஹர்லால் நேரு, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது என்று அளித்த உறுதி மொழியை மீறி, புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டால், இந்தித் திணிப்பை எதிர்த்து 1965 மொழிப் போராட் டத்தை விடப் பன்மடங்கு எழுச்சியுடன் தமிழ் நாட்டில் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கிறேன்.கல்வியை அரசுப் பொறுப்பிலிருந்து முற்றிலும் விடுவித்து, கார்ப்ப ரேட், தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கி உள்ள கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை களை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
கனிமொழி எம்பி (திமுக): இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குமாறு புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்தித் திணிப்பை திமுக தொடர்ந்து எதிர்க்கும்.
திருச்சி சிவா: தமிழகத்தில் எந்த காலத்திலும் இந்தியைக் கால் ஊன்ற திமுக அனுமதிக்காது. இங்குத் தமிழ், ஆங்கிலம் இரு மொழிக் கொள்கைதான் உள்ளது.தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நடை
பெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்களை மத்திய அரசு தெரிந்து கொள்வது நல்லது.
தினகரன்(அமமுக): 8 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடமாக் கப்படும் என்று மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தியைத் திணிக்கும் இம்முயற்சி நாட்டின் பன்முகத் தன்மையைச் சீர்குலைத்து விடும். இந்தி பேசாதவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றி விடும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.