சேஷாநதி குறுக்கே உயர்மட்ட மேம்பாலம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செய லாளர் எஸ்.ஜோதிராமன் கோரிக்கையை ஏற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாத், சேஷாநதி குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் அமைக்க இடத்தை பார்வையிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” மாதந்தோறும் நடந்து வரு கிறது. அரசின் நலத்திட்டங் களை மக்களுக்கு உடனுக் குடன் கிடைக்க அரசு வழி செய்து வருகிறது. அந்த வகையில் பாதூர் ஏரி கரைக்கு கீழ் வயல்வெளி சாலையும்,சேஷாநதி குறுக்கே உயர்மட்ட மேம் பாலமும் அமைத்திட மாவட்ட ஆட்சியர், துறை அதிகாரிகளுடன் பார்வை யிட்டார். இதில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செங்குறிச்சி ஊராட்சியிலிருந்து, பாதூர், கலவனூர், ஒரத்தூர், கில்லனூர், பெரும்பட்டு, சேந்தமங்கலம், களமருதூர் ஆகிய ஊராட்சிகளை தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ் சாலையுடன் இணைக்க இணைப்பு சாலை அமைத்து தர வேண்டும் 2500 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாதூர் ஊராட்சி யில் கரும்பு விவசாயிகள் விளைந்த கரும்பை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்ல சாலை வசதி தேவைப்படுகிறது. எனவே தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் எஸ்.ஜோதி ராமன் மற்றும் விவசாயி கள் சங்கத்தினர் பாதூர், ஒரத்தூர், பெரும்பட்டு, களவனூர், கிராம மக்கள் சாலை வசதி ஏற்படுத்திதரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். அதையொட்டி சாலை அமைக்க இடத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் விரைவில் கோரிக்கை நிறைவேற்றி தரப்படும் என்று உறுதியளித்தார். இந்த ஆய்வின் போது திரு நாவலூர் திட்ட இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.