சென்னை, மே 11- தென்கிழக்கு வங்கக் கடலில் உரு வான அசானி புயல் தீவிர புயலாக மாறி வடக்கு ஆந்திரம்-ஒடிசா கடற்கரை யை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் அசானி புயல் காக்கிநாடா, விசாகப்பட்டினத்தை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியை நெருங்கிய போது வலு விழந்தது. அப்போது மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும் புயல் வடமேற்கு திசை யில் நகர்ந்து ஆந்திர பிரதேச மேற்கு மத்திய கடலோரப் பகுதியை நெருங்கும் என்றும் அதன் பின்னர் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மசூலிப்பட்டணம், நரசயூர், ஏனாம், காக்கிநாடா, துனி, விசாகப்பட்டினம் கடலோரப் பகுதி மற்றும் வடக்கு ஆந்திரா மேற்கு மத்திய வங்க கடலோ ரத்தில் நிலைகொண்டு, பின்னர் வட மேற்கு வங்கக் கடல் நோக்கி வட கிழக்கு திசையில் நகர்ந்து படிப்படி யாக வலுவிழக்கக் கூடும். மேலும் புயலானது வியாழனன்று காற்றழுத்த பகுதியாக கடலுக்குள் வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், காக்கி நாடா கடலோர பகுதியில் மிக பலத்த மழை பெய்யக்கூடும். மேலும் புயல் ஆந்திர கடல் பகுதி வழியாக நகரும் போது பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புயலால், தமிழகத்திலும் ஒருசில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.