tamilnadu

img

செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு விதிமுறைகள் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூன் 3- செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கான தனி விதி முறைகளை வகுக்க கோரிய மனுவை 8 வாரங்களில் தமிழ்நாடு அரசு பரிசீலித்து உத்தரவு பிறப் பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

சென்னை திருவேற்காட்டை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் ஆண்டனி கிளெமென்ட் ரூபின் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல்  செய்துள்ளார். அந்த மனுவில், வீடுகளில் வளர்க்கக்கூடிய செல்லப் பிராணிகள் உரிமையாளர் விடு முறை அல்லது தொழில் காரண மாக வெளியூருக்கு செல்லும் போது அவற்றை பராமரிப்பது மையங்க ளில் குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி செல்லப்பிராணிகளை சேர்த்து விட்டுச் செல்கின்றனர்.

அதேபோல் நாட்டில் முறைப் படுத்தப்படாத செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையங்கள் இயங்கி வருவதாகவும், முறையான தகுதி இல்லாத பராமரிப்பாளர்கள் கொண்ட மையங்களில், பிராணிகள் முறையாக பராமரிக்கப்படாததால் சில நேரங்களில் அவை உயிரி ழக்க நேரிட்டதாகவும், இது போன்ற  சம்பவங்கள் நடை பெற்றிருப்ப தாகவும் ஆண்டனி தெரிவித்துள் ளார்.

மேலும் வர்த்தக நோக்கில் செயல்படும் இதுபோன்ற மையங்களை ஆய்வு செய்த பிறகு  ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் இது போன்ற மையங்களை முறைப் படுத்துவதற்கான பிரிட்டன் அரசு 2018 ஆம் ஆண்டு விதிமுறை கள் இயற்றப்பட்ட உள்ளதாகவும், அதனை பின்பற்றி தமிழ்நாட்டில் செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையங்களை முறைப்படுத்து வதற்கான தனி விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித் துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு,  மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து 8 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தர விட்டு, இந்த வழக்கு முடித்து வைக்க ப்பட்டது.

;