புதுச்சேரி, ஜூலை 9- சாலைபோக்குவரத்து மசோதாவை திரும்ப பெறக்கோரி புதுச்சேரியில் தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் புதுச்சேரி சாரம் ஜீவா னந்தம் சிலை அருகே பிரதேசச் செயலாளர் மதிவாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய சாலைபோக்குவரத்து மசோதா 2 017ஐ உடனே திரும்பப்பெற வேண்டும். உயர்த்தப்பட்ட வாகன காப்பீட்டுத் தொகையை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல், கேஸ் ஆகிய எரி பொருட்களை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரவேண்டும், தனியார் வாகன ஓட்டுனர்க ளுக்கு புதுச்சேரி அரசு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. புதுச்சேரி சாரம் ஜீவானந்தம் சிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இதில் சிஐடியு பிரதேசத் தலைவர் கே.முருகன் போராட் டத்தை துவக்கிவைத்து பேசினார். சிஐடியு நிர்வாகிகள் சீனுவாசன், மது, சிவக்குமார், ரவிச்சந்திரன், ஜோதிபாசு, கணேசன், நாரா யணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.