சென்னை, மே 30- தமிழ்நாடு முழுவதும் அனை த்து பள்ளிகளிலும் மாணவர் களுக்கு ஆதார் பதிவு திட்டத்தை மாநில அரசு கொண்டு வந் துள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் கும ரகுருபரன் கடிதம் எழுதியுள் ளார்.
அதில், “தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்கள், இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக, உதவித்தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ் வுதவி மற்றும் ஊக்கத்தொகை அனைத்தும், மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் முறையாக சென்று செய்வதை உறுதி செய் யும் விதமாக, நேரடி பயனாளர் பரிமாற்றம் (டி.பி.டி.) மூலம் பய னாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தும் முறையும் நடைமுறையில் உள்ளது. இதற்கு ஆதார் எண் அவசியமாகிறது.
எனவே, ‘பயிலும் பள்ளியில் ஆதார் பதிவு’ என்ற சிறப்பு முன் னெடுப்பின் கீழ், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கான, புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணி களை தமிழ்நாடு மின்னணு நிறு வனம் (எல்காட்) மூலம் செயல் படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அப்பணிகளுக்காக ‘எல்காட்’ நிறுவனம் மற்றும் பள் ளிக் கல்வித்துறை அலுவலர் களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்து நிலை யான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் இருந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககம் 770 ஆதார் பதிவு கருவிகளை யும் கொள்முதல் செய்து எல்காட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள் ளது.
ஆதார் பதிவுகள் மேற்கொள் வதற்கு தேவையான ஆதார் தரவு உள்ளீட்டாளர்களை எல் காட் நிறுவனம் தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் பதிவு மற்றும் புதுப் பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனடிப்படையில், “பயி லும் பள்ளியிலேயே ஆதார் பதிவு’’ என்ற சிறப்பு முன்னெ டுப்பு, வரும் கல்வியாண்டில் பள்ளிகள் தொடங்கப்படும் ஜூன் 6 அன்று அனைத்து மாவட் டங்களில் உள்ள வட்டாரங்களி லும் முழுவீச்சில் செயல்பட உள் ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.