tamilnadu

img

ஏழை குழந்தைகளுக்கு இலவச முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை

ஏழை குழந்தைகளுக்கு  இலவச முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை

சென்னை, ஜூன் 24-  பிறவி குறைபாடான முதுகுத்தண்டு சீர்குலை வுடன் பிறக்கும் குழந்தை களுக்கு அறுவை சிகிச்சைகளை குறைந்த கட்டணத்திலும் மற்றும் இலவசமாகவும் வழங்கு வதற்கான ஒரு விரிவான முன்னெடுப்பு திட்டத்தை சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை தொடங்கியுள்ளது. பிராஜெக்ட் ஜீவன் செயல்திட்டம் என்ற பெய ரில் தொடங்கியுள்ள இந்த திட்டம், மித்ரா ரோட்டரி கிளப் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த மற்றொரு ரோட்டரி கிளப்-ன் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்போடு செயல்படுத்ததப்பட வுள்ளது.  முள்ளந்தண்டு பிளவு, பக்க வளைவு மற்றும் தண்டுவடக் கழலை கள் போன்ற பாதிப்புகளால் அவதியுறும் வசதியற்ற சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அவர்க ளது வாழ்க்கையையே மாற்றி மேம்படுத்துகின்ற அறுவை சிகிச்சையை சாத்தியமாக்குவதே இத்திட்டத்தின் நோக்க மாகும் என்று காவேரி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் கே.மகேஷ்குமார் தெரி வித்தார். சிக்கல் நிறைந்த இந்த மருத்துவச் செயல்முறை கள் மருத்துவமனையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவால் மேற்கொள்ளப் படும் என்றும் அவர் கூறி னார். ரோட்டரி பவுண்டே ஷன் மற்றும் ரோட்டரி கிளப்கள் வழியாக திரட்டப்  பட்டிருக்கும் ரூ. 85 லட்சம் என்ற நிதி உதவியின் ஆதர வோடு இந்த முன்னெடுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். முதல் கட்டமாக 35 குழந்தை களுக்கு முதுகுத்தண்டு பிரச்சனைகளை சரி  செய்வதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட வுள்ளது. நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் முது நிலை நிபுணர் டாக்டர்.ஜி பாலமுரளி மித்ரா, ரோட்டரி கிளப் நிர்வாகி சரவணன் ஆகியோர் உடனிருநதனர்.