சென்னை, ஆக. 23- ஒரே வீட்டுக்கு அல் லது தொழில் நிறுவனத் துக்கு இரண்டு இணை ப்புகள் இருந்தால், அதை ஒரே இணைப்பாக ஒருங்கிணைத்து ஒரே கட்டணமாக கணக்கீடு செய்ய புதிய நடை முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“மின்வாரியத்தில் ஏற்படும் தேவை யில்லாத மின் இழப்புகளை சரி செய்யும் வகையில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது, ஒவ்வொரு வீட்டு இணைப்புக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படு கிறது. அதேநேரம் ஒரு வீட்டுக்கு இரு இணைப்புகள் பெற்றிருந்தால், தலா 100 யூனிட் இலவசமாக கிடைக்கும். அதே போல், ஒரே வணிக கட்டடங்களுக்கு இரு இணைப்புகள் இருக்கும் போது மின் கட்டணம் குறைவாக வரும்.
இதனால், மின்வாரியத்துக்கு அதிக அளவு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. இதனால், இத்தகைய இணைப்புகளை கண்டறிந்து ஒரே இணைப்பாக ஒருங்கி ணைத்து மின் கட்டணம் கணக்கிடப்படும். அதன்படி, ஒரு வீட்டுக்கு இரு மின் இணைப்புகள் இருந்தால், இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட் மட்டும் கழித்து, மற்ற யூனிட்களுக்கு கட்டணம் கணக்கிடப்படும். கடைகளுக்கும், இரு மீட்டரில் உள்ள யூனிட்டுகளை கணக்கிட்டு, மொத்தமாக மின் கட்ட ணம் விதிக்கப்படும்.
இதனால், நீண்ட கால வருவாய் இழப்பு தடுக்கப்படும். இந்த நடைமுறை இந்த மாதம் முதல் செயல்பா ட்டுக்கு வந்துள்ளது. அதற்கான மென் பொருள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது” என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.