சென்னை, ஆக. 23 - அரியலூர் மாவட்டம், பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகள் சுபபிரியா (23) இவர், தஞ்சா வூர் மாவட்ட ஆயுதப்படை பெண் காவலராக பணியாற்றி வந்தார். பேராவூரணி அருகே கோவில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியைப் முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் தமது தங்கும் இடத்திற்கு சென்றபோது விபத்தில் உயிரிழந்தார். அவரது மறை விற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அவரது குடும்பத் தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.