tamilnadu

அரசு மருத்துவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை முழுமையாக பெற்றுத் தருக!

அரசு மருத்துவர்களுக்கான  உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு  இடங்களை முழுமையாக பெற்றுத் தருக!

மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் கோரிக்கை

சென்னை, ஜூன் 28 - அரசு மருத்துவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை முழுமையாக பெற்றுத் தர வேண்டும் என மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர்  அரங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்விற் கான மருத்துவர் அரங்கத்தின் பொதுச்  செயலாளர் மரு.எஸ்.காசி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:  அண்மையில் உயர் சிறப்பு மருத்து வப் படிப்புகளுக்கான அகில இந்திய நீட்-2025 தேர்வின் முடிவுகள் வெளி யானதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மருத்து வர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.  உச்ச நீதிமன்ற ஆணைப்படி, கடந்த  இரண்டு வருடங்களாக, இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்தக் கலந் தாய்வில் பெரும்பாலும் அனைத்து  இடங்களையும் அரசுப் பணியிலிருக் கும் மருத்துவர்கள் தேர்வு செய்வார்கள்.  எஞ்சியுள்ள இடங்கள் ஒன்றிய அரசின்,  மருத்துவ கவுன்சிலிங் கமிட்டியிடம் அகில இந்திய கலந்தாய்வுக்கு திருப்பி அளிக் கப்படும். இந்தப் பின்னணியில் கடந்த 16.5.2025 மற்றும் 20.5.2025 தேதிகளில் அரசு மருத்துவர்களுக்கான கலந்தாய்வு  நடத்தப்பட்டு 27.5.2025 அன்று முதற் கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றது. மொத்தமுள்ள 240 இடங்களில் 96 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்ட நிலை யில், மீதமுள்ள 144 இடங்களுக்கு இரண் டாம் கட்ட கலந்தாய்வு நடத்த அனுமதி யளிக்காமல், அகில இந்திய மருத்துவ  கவுன்சிலிங் கமிட்டிக்கு 144 இடங்களை யும் திருப்பி அனுப்புமாறு 3.6.2025 அன்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தமிழக மருத்துவக் கல்வி இயக்கு நருக்கு ஆணையிட்டது. இதனால் இரண்டாம் கட்ட கலந் தாய்வில் எஞ்சியுள்ள இடங்களை அரசு  மருத்துவர்கள் தேர்வு செய்யவோ, முதற் கட்ட கலந்தாய்வில் தேர்ந்தெடுத்த கல்லூரிகளையோ அல்லது சிகிச்சைப் பிரிவுகளையோ தன் விருப்பப்படி மாற்றவோ முடியவில்லை. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், சுகா தார செயலாளரும், ஒன்றிய சுகாதார  அமைச்சருக்கு “கடிதம்” எழுதியிருந்த னர்.  இந்நிலையில், பாதிக்கப்பட்ட 4  மருத்துவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒன்றிய சுகாதார அமைச்ச கத்தின் 3.6.2025 தேதியிட்ட ஆணையை  திரும்பப் பெறக் கோரி வழக்குத்  தொடர்ந்தனர். நடைமுறைகள்  முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளதாக வும், வழக்குத் தொடர்ந்த மாணவர் கள் முதற்கட்ட கலந்தாய்வில் பங்கெடுத் ததன் மூலம் “பாதிக்கப்பட்டவர்களாக” கருத முடியாது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து 19.6.2025 அன்று உத்தரவிட்டது. இதனால் தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு இந்த வரு டம் கிடைத்திருக்க வேண்டிய 144 உயர்  சிறப்பு மருத்துவ இடங்களை நாம் இழந்துள்ளோம். “நீட் தேர்வுகள்” நடைமுறைக்கு வந்த பிறகு, அரசு மருத்துவர்களின் பற்றாக்குறை அனைத்து மட்டங்களி லும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிறப்பு  மருத்துவர்களின் எண்ணிக்கை போது மானதாக இல்லை. ஒன்றிய சுகாதாரத் துறையின், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான இந்த நடவடிக்கையும், தமிழக மருத்துவக் கல்வித் துறையின் கவனக் குறைவும், இந்தப் பற்றாக்குறையை மேலும் அதிகரித்திருக்கிறது. இத னால் போதிய சிறப்பு மருத்துவர்கள் இல்லாத நிலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சுகாதார சேவை கள் பாதிக்கப்படும். எனவே “வருங்காலத்தில் தமிழக  சுகாதாரத் துறை விழிப்புடன் இருப்பது டன், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, நம் உரி மைகளை நிலை நாட்ட வேண்டும்” என்று மக்கள் நல்வாழ்விற்கான மருத்து வர் அரங்கம் கேட்டுக் கொள்கிறது. மேலும் மருத்துவ மற்றும் சுகா தாரக் கட்டமைப்பின் விரிவாக்கத்திற்கு  ஏற்றார்போல் போதிய எண்ணிக்கை யில் மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் ஒப்பந்த முறை யைத் தவிர்த்து, “நிரந்தர” அடிப்படை யில் பணியமர்த்த வேண்டுமென்றும் மருத்துவர் அரங்கம் கேட்டுக் கொள் கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.