tamilnadu

img

பட்டாசு வெடித்த  348 பேர் மீது வழக்கு....

சென்னை:
சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 348 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். 

காற்றுமாசு காரணமாக தீபாவளியன்று 2 மணி நேரம்மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில்  சென்னையில் நேர கட்டுப்பாட்டை மீறி
பட்டாசு  வெடித்ததாக 348 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சென்னை, மதுரை, சேலம், திருச்சி, தூத்துக்குடி, திண்டுக்கல் மாவட்டங்களில் பட்டாசு விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர், நெல்லை, கடலூர், விருதுநகர், அரியலூர், திருப்பத்தூர், பெரம்பலூர், புதுக்கோட்டையிலும் பட்டாசு விதிமீறல் தொடர்பாக எந்த வழக்கும் பதிவாகவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.