tamilnadu

img

நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து....

சென்னை:
தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.சென்னை, தி. நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில், தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகம் இயங்கிவருகிறது.சனி, ஞாயிறு இரண்டு நாள்களும் அலுவலகம் விடுமுறை என்பதால் பணிக்கு ஆள்கள் யாரும் வராத நிலையில், திங்களன்று (டிச.7) அதிகாலை அலுவலகத்திலிருந்து கரும்புகை வெளியேறியது.இதைக் கண்ட காவலாளி உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.நடிகர் சங்க விவகாரம் தொடர் பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், தற்போது தென் னிந்திய நடிகர் சங்க அலுவலகம் சிறப்பு அலுவலர் கண்காணிப் பின்கீழ் இயங்கிவருகிறது.தீயில் பல முக்கிய ஆவணங்கள், கணினி பொருள்கள் எரிந்து நாசமாகியுள்ளன. தீ விபத்துக்கான காரணம் குறித்து, தேனாம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தென்னிந்திய நடிகர் சங்கத் தில் பல்வேறு பிரச்சனைகள் நிலவிவரும் நிலையில் தீ விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

;