போராளி பா.ராஜாராமனின் போராட்டம் தொடரும்!
பணி நிறைவு பாராட்டு விழாவில் அ.சவுந்தராசன் பேச்சு
சென்னை, ஜூன் 28 - சமூக மாற்றத்திற்காக மாணவர் பருவத்தில் தொடங்கிய பா.ராஜா ராமனின் போராட்டம் தொடரும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்த ரராசன் கூறினார். ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) செயல் தலைவர் பா.ராஜாராமன் பணி நிறைவு பாராட்டு விழா வெள்ளி யன்று (ஜூன் 27) ஐசிஎப் தெற்கு காலனி குறிஞ்சி நன்னலமன்றத்தில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் அ.சவுந்தராசன் பேசுகை யில்,“ராஜாராமன் ஒரு போராளி. மாணவர் பருவத் திலிருந்து சமூக மேம்பாட் டிற்கான போராட்டத்தை நடத்தி வருபவர். ஆளும் அரசு, அதிகாரிகள், முதலா ளிகள் செங்கொடியை அழிக்க துடிக்கிறார்கள். அதனையெல்லாம் மீறி ஐசிஎப்-ல் சிஐடியு நிலைத்து நிற்கிறது. தனியார் மயத்தை எதிர்த்த போராடுவதுதான் பொதுத்துறை தொழிலா ளர்களின் முக்கிய பிரச்சனை யாக உள்ளது. பொதுத் துறையை பாதுகாக்கும் போராட்டத்தில் சமரசம் இன்றி செங்கொடி இயக்கம் போராடுகிறது. அதன் தள பதியாக ராஜாராமன் இருந்தார். இனியும் இருப் பார்”என்றார். இந்நிகழ்வில் சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதியாக 10ஆயி ரம் ரூபாயை அ.சவுந்தர ராசனிடம், பா.ராஜாராமன் வழங்கினார். இந்நிகழ்வுக்கு சங்கத் தின் தலைவர் சி.சத்திய மூர்த்தி தலைமை தாங்கி னார். பொதுச்செயலாளர் கே.டி.ஜோஷி வரவேற் றார். டிஆர்இயு பொதுச் செயலாளர் வி.ஹரிலால், பொருளாளர் ஆர்.சர வணன், துணைத்தலைவர் ஏ.எம்.பேபிஷகிலா, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் எம்.தயாளன், செயலாளர் சி.திருவேட்டை, தென்சென்னை மாவட்ட துணைத்தலைவர் க.பீம் ராவ், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு.பாபிரின்ஸ் கஜேந்திரபாபு, டிஆர்இயு ஓய்வுபெற்றோர் அமைப் பின் தலைவர் ஆர்.இளங் கோவன், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஆர்.முரளி உள்ளிட்டோர் பேசினர்.