tamilnadu

img

பாடியநல்லூரில் பழுதடைந்த சிக்னல்கள் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சென்னை, ஜூன் 6- பழுதடைந்த சிக்னல் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்குன்றம் கூட்டுச்சாலை, சோழவரம், சுங்கச்சாவடி ஆகிய பகுதிகளில் இருந்து செல்லும் வாகனங்கள், பாதசாரிகள் செல்வதற்கு வசதியாக சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த சிக்னல் செயல்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாக னங்கள் குறுக்கும் நெடுக்குமாக செல்வ தால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரி கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் இந்த வழியாக செல்லும் ஒரு சில வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே உடனடியாக மாதவரம் போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் பழுதடைந்த சிக்னல்களை  சீரமைக்க உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;