செங்கல்பட்டு மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு
மதுரை நோக்கி பயணிக்கும் தோழர் சிந்தனை சிற்பி சிங்காரவேலன் நினைவு ஜோதிக்கு கூடுவாஞ்சேரியில் கே.சேஷாத்திரி தலைமையில் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டு அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற வரவேற்பு கூட்டத்தில் பகுதிச் செயலாளர் கே.வேலன் தலைமையிலும், மதுராந்தகத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் பி.மாசிலாமணி தலைமையிலும், சோத்துப்பாக்கத்தில் செய்யூர் வட்ட செயலாளர்கள் க.புருஷோத்தமன் தலைமையிலும் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு கூட்டங்களில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட குழு உறுப்பினர்கள் இடையே கமிட்டி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் தீர்மானங்களை விளக்கி பேசினர்.