கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய கும்பலை கைது செய்வதோடு, இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க கோரி வெள்ளியன்று (ஜூன் 21) அண்ணாசாலையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமைப்பின் மத்திய சென்னை கிளை தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், பொருளாளர் வெங்கடேசன், மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், துணைத்தலைவர் எம்.தயாளன், கிளை பொருளாளர் முருகவேல் உள்ளிட்டோர் பேசினர்.